search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் முற்றுகை"

    • மதுபான கடை மற்றும் மனமகிழ்மன்றத்தை ரத்து செய்து பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    • மதுபான கடைகளை தமிழக அரசு குறைக்கும் என்று அறிவித்த நிலையில் இங்கு மதுபான கடைகளை திறப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை சேவூர் அடுத்த பந்தம்பாளையம் பகுதி கிராம பொதுமக்கள், பெண்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் மதுபான கடை மற்றும் மனமகிழ்மன்றம் வர இருப்பதாக அறிகிறோம். இப்பகுதியில் ஏராளமான கூலித்தொழிலாளிகளும், பெண்களும், குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.

    மேலும் இந்த இடத்தின் அருகில் அங்கீகாரம் பெற்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இதில் புதிதாக வீடுகட்டி குடும்பத்தோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    கருவலூர்-சேவூர் செல்லும் சாலையில் அமைந்து இருப்பதால் பெண்களும்,குழந்தைகளும் இந்த வழியே பாதுகாப்பாக செல்ல இயலாத நிலை ஏற்படும். திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து அங்கு மக்கள் வசிக்க இயலாத நிலை ஏற்படும். எனவே இங்கு அமைய இருக்கும் மதுபான கடை மற்றும் மனமகிழ்மன்றத்தை ரத்து செய்து பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    மதுபான கடைகளை தமிழக அரசு குறைக்கும் என்று அறிவித்த நிலையில் இங்கு மதுபான கடைகளை திறப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • குடிநீர் பம்பில் தண்ணீர் விடாமல் தடுப்பதாக புகார்
    • சமரச பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியில் சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் பம்ப் போடப்பட்டது.

    அந்த குடிநீர் பம்பை அதே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போடப்பட்ட குடிநீர் பம்பை பயன்படுத்திக் கொண்டு வேறு யாருக்கும் அந்த குடிநீர் பம்பில் தண்ணீர் விடாமல் சொந்தம் கொண்டாடி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் நேற்று ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்க ளுடன் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலு வகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்பகுதி பொது மக்களுக்கு அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க படும் என கூறி சமரச பேச்சு வார்த்தை ஈடுபட்டதின் பேரில் அங்கிருந்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • ராஜபாளையம் அருகே கோவிலுக்கு சீல் வைக்க சென்ற தாசில்தாரை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வளர்ந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேல தெரு கீழத்தெரு என பிரித்து 500 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஓராண்டு மேல தெருவுக்கு என்றும், அடுத்த ஆண்டு கீழ தெருவுக்கு என்றும் முறை வைத்து சாமி கும்பிட்டு வருகின்றனர்.

    சாமி கும்பிடுவதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வளர்ந்த நிலையில், நேற்று ஒரு பிரிவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இருதரப்பினரையும் அழைத்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அமைதி கூட்டம் நடத்தப்பட்டது. தற்காலிகமாக கோவிலை மூடி சீல் வைப்பது என்று இருதரப்பு நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோர்ட்டு மூலம் தீர்ப்பு கிடைத்த பின்னர் கோவிலை திறந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கையெழுத்து போட்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் நேற்று கோவிலுக்கு சீல் வைப்பதற்காக ராஜ பாளையம் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்ட ராமன் சென்றார். அவரை முற்றுகையிட்ட பெண்கள் கோவிலுக்கு சீல் வைக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாமி ஆடி கோவிலுக்கு சீல் வைக்கக் கூடாது, சீல் வைத்தால் விளைவுகளை சந்திப்பீர்கள் என சத்தமிட்டு பிரச்சினையில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ேபாலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கோவிலுக்கு சீல் வைத்து செல்கிறோம், நீங்கள் கோர்ட்டு மூலம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 நாள் வேலை வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோசூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை தர மறுப்பதாக கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அரக் கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் முனிசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்கப்படாததால் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • மேலும் சாலை மறியலுக்கும் முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு யூனியனுக்குட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சியில் கணவாய்பட்டி, ஆசிரமகாலனி, காந்திநகர், காமராஜர்புரம் ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பணிகள் ஒதுக்குவதில் பிரச்சிைன ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு வாரம் மட்டுமே பணிகள் ஒதுக்கி வந்துள்ளனர்.

    மிகவும் வறண்ட கிராமங்களான இப்பகுதியில் 100 நாள் வேலைதிட்ட பணி கிடைக்காததால் பெண்கள் மிகவும் கவலையில் இருந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் இன்று வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் தங்களுக்கு பணி ஒதுக்குவது குறித்து உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். இல்லையெனில் சாலை மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். முன்னதாக இன்று காலையில் எழுவனம்பட்டி, கோம்பைபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு 100 நாள் வேலைதிட்டத்தில் பயனாளிகளின் பெயர் விடுபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கட்டகாமன்பட்டி பகுதி கிராம மக்களும் போராட்டத்திற்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது.

    ×